தொடர்ந்து உதவுமாறு வங்கிகளுக்கு அன்வார் உத்தரவு

தனிநபர்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உதவிகளை வங்கிகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றன.
மேலும், சிக்கலில் உள்ள கடன் வாங்குபவர்கள், கடன் தொடர்பான அலோசனை, மேலாண்மை நிறுவனம் மூலம் இலவச ஆலோசனை மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் உதவிகளை பெறலாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
அதே வேளையில், பொது மக்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கும் உதவ தயாராக இருக்கும் வங்கி நிறுவனங்கள் காட்டும் அர்ப்பணிப்பில் தாம் திருப்த்தி அடைவதாக நிதி அமைச்சருமான அன்வார் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS