ஜோகூர், பொந்தியானில் வீடு புகுந்து கொள்ளையிட்டதாக நம்பப்படும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி உட்பட நாட்டின் முன்னணிக் குழுக்களுக்கு விளையாடிய 33 வயதுடைய அந்த கால்பந்தாட்ட வீரர் பெனுட்டில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து பல ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை களவாடியது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த கால்பந்தாட்ட வீரரை தடுத்து போலீசார் விசாரணை செய்த போது அவர் வீடு புகுந்து கொள்ளையிட்ட விவகாரம் தெரியவந்துள்ளது. அந்த வீரர் கைது செய்யப்பட்டதை பொந்தியான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அப்துல் ஹாமிட் அப்துல் ரஹ்மான் உறுதிபடுத்தியள்ளார்.