நாட்டில் லஞ்ச அமலாக்கத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்களில் பெரும் பகுதியினர் முஸ்லிம் அல்லாாதவர்கள் என்று கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். முஸ்லிம் அல்லாதவர்களே அதிகளவில் லஞ்சம் கொடுக்கின்றனர் என்ற நடப்பு உண்மையை தாம் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயாராக இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனூசி நூர் குறிப்பிட்டார்.
தாம் இவ்வாறு ஆணித்தரமாக சொல்வதால் சிலருக்கு ஆத்திரம் ஏற்படலாம். ஆனால், நடப்பு உண்மை இதுதான். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை என்று சனூசி திட்டவட்டமாக தெரிவித்தார்.