அனுமதியின்றி மின் வர்த்தக முறை வாயிலாக பகாங் மாநிலத்தின் உயரிய விருதுகளுக்கான பதக்கங்கள் மற்றும் சின்னங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவது தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ யாயா ஓத்மான் தெரிவித்துள்ளார். இந்த மின் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் மற்றும் பதக்கங்களை விற்பவர், வாங்குபவர் குறித்து தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக யாயா ஓத்மான் குறிப்பிட்டார்.
பகாங் மாநில உயரிய விருதுக்கான பதக்கங்கள் மற்றும் சின்னங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கடந்த ஜுலை 11 ஆம் தேதி பெக்கான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் உயரிய விருதுக்கான பதக்கங்கள் விற்பனை செய்யப்படுவது 2017 ஆம் ஆண்டு பகாங் விருதளிப்பு சட்டத்திற்கு முரணானதாகும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.