கோலத்திரெங்கானு இடைத் தேர்தல் விவாதிக்கப்படும்

15 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி வெற்றிப் பெற்ற கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவு, ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதியை நிர்ணயிப்பதற்கு தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தனது கூட்டத்தை நடத்தவிருக்கிறது.

பாஸ் கட்சியின் வெற்றியை தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்தைத் தொடர்ந்து அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று பாஸ் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோலத் திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு மற்றும் வேட்புமனுத்தாக்கல் தேதி குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS