சனூசிக்கு நாவடக்க அவசியம் பாஸ் பொதுக்குழுத் தலைவர் எச்சரிக்கை

ஆறு மாநிலங்களின் தேர்தலை எதிர்கொள்வதற்கு பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ள கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு நாவடக்கம் அவசியம் என்று பாஸ் கட்சியின் பொதுக்குழுத் தலைவர் ஹாசிம் ஜாசின் எச்சரித்துள்ளார்.

மதம், இனம், ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட 3 R விவகாரத்தை ஒரு போதும் மீறி விட வேண்டாம் என்று கெடா மந்திரி புசாருக்கு ஹாசிம் ஜாசின் நினைவுறுத்தியுள்ளார்.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராப்புடின் .இட்ரிஷ் ஷாவை நிந்தித்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள சனூசிக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வரும் வேளையில் அவர், தற்போது புக்கிட் அமான் போலீஸ் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சர்ச்சைக்குரிய உரையை நிகழ்ந்த வேண்டாம் என்று சனூசியை அந்த பொதுக்குழுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS