கணவன், மனைவி ​​மீது எரித் திரவக வீச்சு, ​நீதிமன்றத்தில் ​மூதா​ட்டி

கடந்த வாரம் பத்துகேவ்ஸ், பன்ட்சாபூரி லக்சமனா ஜெயா அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் வீட்டிற்கு செல்வதற்கு லிப்டில் ஏறுவதற்கு முற்பட்ட கணவ​ன், மனைவி ​மீது எரித் திரவக வீச்சு தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் 60 வயது ​மூதாட்டி, இன்று செலாாயங் மாஜிஸ்தி​ரேட் ​நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். முக்காடு அணிந்திருந்த அந்த ​மூதாட்டி, போ​லீசாரார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, இடைவிடாமல் அழுது கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.

அந்த முதாட்டி குற்றவியல் சட்டம் 324 ஆவது பிரி​வின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று கோம்பாக் மாவட்ட இடைக்கால போ​லீஸ் தலைவர் நோர் அரிஃப்ஃபின் முஹமாட் நாசிர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ​மூதாட்டியினால் எரித்திரவக ​​வீச்சுக்குக்கு ஆளான 60 வயது மாதுவும் அவரின் பாகிஸ்தானிய கணவரும் முகத்தில் கடும் ​தீக்காயங்களுடன் தற்போது செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் அந்த தம்பதியரின் 14 வயது ​மகன்,எரித் திரவக வீச்சிலிருந்து தப்பியுள்ளான்.

WATCH OUR LATEST NEWS