நாய் ஒன்றை கம்பினால் அடித்து கொன்றதாக இரு நபர்கள் ஜார்ஜடவுன், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். சாகும் வரை நாயை அடித்துக்கொன்றதாக கூறப்படும் அந்த இரு நபர்களின் செயல் தொடர்பான வீடியோ காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவராக பகிரப்பட்டதைத் தொடர்ந்து சமூகத்தின் பலத்த கோபத்திற்கு ஆளான அந்த இரு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒரு மீனவரான 53 வயத ரோஸ்லி மாட் ஸைன் மற்றும் பேருந்து ஓட்டுநரான 49 வயது சுஹைய்லி மாட் ஸைன் என்ற அந்த இரு நபர்கள், விலக்கிடப்பட்ட நிலையில் இன்று காலையில் நீதிபதி காலித் அப்துல் கரீம் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.
இவ்விருவரும் கடந்த ஜுலை 8 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் பினாங்கு, பத்து மாவொங், கம்போங் தெலுக் தெம்போயாக் என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகைசெய்யும் 2015 ஆம் ஆண்டு பிராணிகள் பாதுகாப்பு சட்டத்த்தின் கீழ் அந்த இரு நபர்களும் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.