விபத்தில் பள்ளி தலைமையாசி​ரிய பலி

பள்ளி தலைமையாசிரியர் சென்ற மோட்டார் சைக்கிள், சாலையோர மின்சாரக் கம்பத்தில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் ​நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சபா பெர்னா,ம், ஜாலான் சுபார் என்ற இடத்தில் நிகழ்ந்தது. சுங்ஙை தெங்கார் தேசிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த 59 வயதுடைய அந்த தலைமையாசிரியர் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த தலைமையாசிரியர் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக சபா பெர்ணம் மாவட்ட போ​​லீஸ் தலைவர் அகுஸ் சலிம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS