சிவகார்த்திகேயன் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றது. மண்டேலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அஸ்வின். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார் என்றதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது.
இதையடுத்து இப்படத்தின் போஸ்டர் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானதை அடுத்து கண்டிப்பாக மாவீரன் வித்யாசமான படமாக இருக்கும் என ரசிகர்களால் கணிக்கப்பட்டது. அதுபோலவே தற்போது வெளியான மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை புது விதமாக காட்டி அவர்களுக்கு புதுவிதமான ஒரு அனுபவத்தை கொடுத்தது.
என்னதான் மாவீரன் கமர்ஷியல் படமாக இருந்தாலும் அதிலும் புதுமையை காட்டி ரசிகர்களை ஈர்த்தார் இயக்குனர் அஸ்வின். குறிப்பாக இப்படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் தான் ஹைலைட்டான விஷயமாக அமைந்தது.
வழக்கமாக தன் படங்களில் சிரித்து பேசி கலகலவென நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதுவே ரசிகர்களுக்கு புதுசாக இருந்தது. இந்நிலையில் இவ்வாறு பல சிறப்பான விஷயங்கள் மாவீரன் படத்தில் அமைந்துள்ளதால் படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது.