போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட கென்யா நாட்டைச் சேர்ந்த மாது, அத்தண்டனையிலிருந்து இன்று உயிர்தப்பினார்.
பமீலா பாயித் அஒகோ ஓமொல்லோ என்ற 39 வயதுடைய அந்த மாதுவின் தண்டனையை ரத்து செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோஸ்ரீ கமாலுடின் எம்டி சைட் தமது தீர்ப்பில் தெரிவித்தார். எனினும் அந்த மாதுவிற்கு எதிரான குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி கமாலுதீன் எம்.டி சைட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம தேதி சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 903.5 கிராம் போதைப்பொருளை கடத்தியதாக நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான பமீலா குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.