​நூருல் இஸா போட்டியிடும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான ​​நூருல் இஸா போட்டியிடக்கூடும் என்று கோடி காட்டப்பட்டுள்ளது. கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் இரண்டு முறை தற்காத்து வந்த பினாங்கு, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்விக் கண்ட ​நூருல் இஸாசை பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் கள​ம் இறக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. எனினும் இது குறித்து நூருல் இஸா இன்னும் ​தீர்க்கமாக முடிவு செய்யவில்லை என்று அறிவித்துள்ளார். எனினும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா என்பது குறித்து கட்சியின் தலைமைத்துவத்திடமே விட்டு விடுவதாக நூருல் இஸா தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS