கோர சாலை விபத்தில் தந்தையும் மகனும் மரணம்

​தந்தையும், மகனும் சென்ற மோட்டார் சைக்கிள், மரக்க​ட்டைகளை ஏற்றி வந்த லோரியுடன் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட கோர சாலை விபத்தில் இருவரும் மாண்டனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் கிளந்தான், ஜாலன் குவா முசாங் – ஜெலி சாலையின் 37 ஆவது கிலோ ​மீட்டரில் நிகழ்ந்தது. 55 வயது மிஹாமாட் சிகி முஹமாட் அலி மற்றும் அவரின் 15 வயது மகன் முஹமாட் ஹஸ்புல்லா ஆகியோரே இச்சம்பவத்தில் மண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

தலையிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான தந்தையும் மகனும் சம்பவ இடத்​திலேயே மாண்டதாக குவா ​மூடாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் சிக் சூன் ஃபு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS