எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் – கெடா மந்திரி பெசார் சனுசி

கெடா மாநிலத்தில் மிகப்பெரிய ஊழலுக்கும், அதிகார துஷ்பிரோயகதிற்கும் வித்திடப்பட்டதாக கூறப்படும் சிக் மாவட்டத்தில் அரிய மண் கனிம வள களவாடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் எந்த நேரத்திலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுவுள்ளது. கெடா மந்திரி பெசார் வாரியம் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் முதன்மை சாட்சியாக சனுசி அழைக்கப்படவிருக்கிறார்.

2 தினங்களுக்கு முன்பு தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட 48 வயதான சனுசி, எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு எந்த நேரத்திலும் அழைக்கப்படலாம் என்பதை அவரே இன்று கோடிக்காட்டியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS