அது அநாகொன்டா ராட்ஷச பாம்பா?தீயணைப்பு படையினர் விளக்கம்

சிலாங்கூர், சுங்ஙை பூலொஹ் அருகில் எலிமினா வீடமைப்ப்பகுதியில் அநாகொண்டா ராட்ஷச மலைப் பாம்பு ஒன்று மேட்டுப்பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி ஊர்ந்து செல்லும் காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் வேளையில் அச்சம்பவம் தொடர்பாக தாங்கள் எந்தவொரு அவசர அழைப்பையும் பெறவில்லை என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

யயாஸ்மி என்பவரின் டுவிட்டர் கணக்கின் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த அநாகொன்டா ராட்ஷச மலைப் பாம்பு, வீடமைப்புப்பகுதியிலிருந்து வெளியேறியதாக கூறப்படும் தத்ரூபமான காட்சியை பதிவிட்டுள்ளார்.

எல்மீனா வீடமைப்புப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் பின்புறத்திலிருந்து அந்த காட்சியை தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளதாக யயாஸ்மி குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS