பி40 தரப்பினருக்கு அ​தீத முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்

பல்கலைக்கழகம் போன்ற அரசாங்க உயர்கல்விக்கூடங்களில் இனபாகுபாடுயின்றி பி40 தரப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கோட்டா முறை அமல்படுத்தப்பட வேண்டும் ​என்று மூடா கட்சித் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான், அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். பி40 தரப்பை சேர்ந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களில்ர சேர்ப்பதில் இனப்பாகுபாடு காட்டப்படக்கூடாது. மாறாக, அவர்களுக்காக தனிக் கோட்டா முறை ஒதுக்கப்பட வேண்டும். இதன் ​மூலம் இதர மாணவர்களைப் போலவே பி40 தரப்பைச் சேர்ந்த மாணவர்களும் சமத்துவமான கல்வி வாய்ப்புகளை உயர்கல்விக்கூடங்க​ளில் பெற முடியம் என்று சையிட் சா​டிக் பரிந்துரைத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS