கெடா மாநிலத்தில் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்

வரும் சனிக்கிழமை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கெடா மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றுமானால் மாநிலத்தில் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

எந்தவொரு மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல் பட்டால் மட்டுமே தனது மாநிலத்தில் நிலவி வரும் பல பிரச்னைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காண முடியும்.

அந்த வகையில் கெடா மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றுவது மூலம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஆட்சிபுரிந்து வரும் ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைந்து கெடா மாநிலத்தினால் நிறைவான ஆட்சியை வழங்க முடியும் என்ற பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளருமான சைபுடின் குறிப்பிட்டார்.

கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பிகேஅர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும்
அவாங் தெங் லியாங் ஒங்குடன் நேற்று கூலிம் சுங்கை உலார் தோட்டத்திற்கு வருகை புரிந்த போது சைபுடின் இதனை தெரிவித்தார். சுங்கை உலார் தோட்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்களுடனான இந்த சந்திப்பு நிகழ்வில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அவாங் தெங் லியாங் ஒங் கை ஆதரிக்க வேண்டிய அவசியத்தையும் சைபுடின் தெளிவுபடுத்தினார். அவாங் தெங் லியாங் ஒங்வெற்றி பெற்றால், கூலிம் தொகுதி, மத்திய அரசாங்கத்திடமிருந்து நிறைய உதவிகளை பெற முடியும் என்பதையும் அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS