சிலாங்கூர், கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் ஒரு கல்விமானாகிய டாக்டர் ரா. சிவபிரகாஷ், தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று அம்பாங் பெச்சாஹ் உள்ளூர் கிராம மக்களுடன் சந்திப்பு நடத்தினார்.
கோலகுபு பாருவிலிருந்து 2.4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அம்பாங் பெச்சாஹ்வில் உள்ளூர் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், இதன் மூலம் உள்ளூர் இளையோர்கள் அதிகமான வேலை வாய்ப்புகளை பெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கிராம மக்களுக்கு விளக்கினார்.
வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கோலகுபு பாரு தொகுதியில் மூடா வேட்பாளராக போட்டியிடும் தம்மை மக்கள் தேர்வு செய்வார்களேயானால் கோல குபு பாரு வட்டார மக்கள் எந்தெந்த ரூபத்தில் பொருளியல் சுற்றுலாத் தொழில் துறையில் ஈடுபட முடியும், வருமானத்தை பெருக்க முடியும் என்பதற்கான பலதரப்பட்ட முன்னெடுப்புகளை தாம் மேற்கொள்ளவிருப்பதாக டாக்டர் சிவபிரகாஷ் விளக்கினார்.

