9 வயது சிறுமி ஒருவர் குழந்தையை பிரசவித்த முதலாவது சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. நாட்டில் மிகச்சிறிய வயதில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்து உள்ளதாக யாயாசான் இக்லாஸ் அறவாரித்தின் தலைவர் ஜைனூர் ரஷீத் ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.
பினாங்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இச்சம்பவம் மிகுந்த அச்சத்தை ஏற்ப்படுத்துவதாக உள்ளது என்று அரசாங்க சார்பற்ற அமைப்பின் அந்த தலைவர் கூறுகிறார்.
அபாசப் படத்தை பார்த்த தமது அண்ணனின் தகாத உறவின் விளைவாக இக்குழந்தை பிரசவிக்கப்பட்டதாக குறிப்பிட்ட ஜைனூர், இதற்கு முன்பு 17 மற்றும் 18 வயதுடைய இரு வயதுக்குறைந்த பெண்கள் குழந்தை பிரசவித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சம்பவங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது காரணம், மலேசியாவில் திருமணம் ஆகாமலேயே சுதந்திரமாக தகாத உறவுக் கொள்ளும் வயது குறைந்த பிள்ளைகள் மத்தியில் 10 பேரில் ஒருவர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய செயல்களை தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜைனூர் ரஷீத் கேட்டுக் கொண்டுள்ளார்.