கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ செரி ஷுஹைலி முஹமாட் சையின், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் புதிய சி.ஐ.டி. இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இறக்குநராக பொறுப்பில் இருந்த டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை, போலீஸ் படைத்துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்னும் நிரப்பப்படாமல் இருந்து சி.ஐ.டி. இயக்குநர் பதவிக்கு ஷுஹைலி முஹமாட் சையின், நியமிக்கப்பட்டுள்ளார்.
பினாங்கு மாநில போலீஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்தஷுஹைலி முஹமாட் சையின், கடந்த மே மாதம், பணி மாற்றலாகி, கோலாலம்பூர் போலீஸ் தலைவராக பொறுப்பேற்று இருந்த நிலையில் அவர் தற்போது சிஐடி இயக்குநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.