தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப், தனது சந்தாதாரர்களுக்கு கூடுதல் லாப ஈவு விகிதத்தை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 முதலாவது அரையாண்டில் சந்தை நிலைமைக்கு ஏற்ப இபிஎப் செயல்பாடுகள் சிறப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் லாப ஈவு விகிதத்தை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இபிஎப் வாரியம், மிக கவனமாக செயல்படுத்திய முதலீட்டு வியூகத்தின் வாயிலாக முதலீடு தொடர்பான வருமானங்கள் அதிகரித்து இருப்பதால் கூடுதல் லாப ஈவை அதனால் அறிவிக்க முடியும் என்று பேங்க் முஹமாட் மலேசியா பி.ஹ்.டி. வங்கியின் சமூகவியல் பொருளாதார நிதித்துறை தலைவர் டாக்டர் முகமது அப்ஸானிசம் அப்துல் ரஷீத் கூறுகிறார். இவ்வாண்டு முதல் அரையாண்டில் 3,319 கோடி வெள்ளி முதலீட்டு வருமானத்தை இபிஎப் பெற்றுள்ளதாக அவர் கூறுகிறார். இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 944 கோடி வெள்ளி கூடுதலாகும். அவ்வாண்டில் 2,375 வெள்ளி முதலீட்டு வருமானத்தை இபிஎப் ஈட்டியிருந்ததை டாக்டர் முகமது அப்ஸானிசம் சுட்டிக்காட்டியுள்ளார்.