அந்நிய நாட்டவர்களுக்கு குறிப்பாக சீனப்பிரஜைகளுக்கு பெரியளவில் குடியுரிமை வழங்கும் நடைமுறையை உள்துறை அமைச்சு மேற்கொண்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
குடியுரிமைப் பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளவர்களின் பிரச்னையை தீர்ப்பதற்கு உள்துறை அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படியொரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக சைபுடின் விளக்கினார்.