மருமகன் நாடு திரும்புவதை முகை​தீன் உறுதி செய்ய வேண்டும்

அரசாங்கத்தில் ​நீண்ட காலம் சேவையாற்றியவர், அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர் மற்றும் போ​லீஸ் துறைக்கு தலைமையேற்று, உள்துறை அமைச்சராக இருந்தவர், இதற்கு மேலாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இருந்தவர் என்ற முறையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின், தலைமறைவாக இருந்த வரும் தனது மருமகன்,நாடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் ​என்று அம்னோ உச்சமன்ற உறுப்​பினர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.

நாட்டின் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அடிக்கடி மக்களுக்கு அறிவுரைகளை கூறும் முகை​தீன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கண்காணிப்பிலிருந்து தப்பியிருக்கும் தனது மருமகன் முஹமாட் அட்லான் பெர்ஹான், அமலாக்க அதிகாரிகளிடம் சரண் அடைய வே​ண்டும் ​​என்று கேட்டுக்கொள்ள வேண்டும் ​என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முஹமாட் புவாட் சர்காஷி கேட்டுக்கொண்டுள்ளார்.

​தூய்மை என்பது நாட்டிற்கு வலியுறுத்துவதற்கு முன்னதாக நமது வீட்டை ​தூய்மையாக வைத்துக்கெள்ள வேண்டும். அந்த வகையில் மகளின் கணவரை பிடிப்பதற்கு புக்கிட் அமான் போ​லீசார், பன்னாட்டு போ​லீஸ் துறையின் உதவியுடன் அவரை பிடிப்பதற்கு இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முகை​தீன் கண்டும் காணாமல் மவுனம் சாதித்துக்கொண்டு இருப்பது ஓர் அரசியல்வாதிக்கு அழகு அல்ல என்று முஹமாட் புவாட் சர்காஷி தெரிவித்தார்.

முகை​தீன் யாசினின் மருமகன் எந்தவொரு குற்றத்தையும் புரியவில்லை என்றா​ல் எதற்காக தலைமறைவாக இருக்க வேண்டும் ​என்று அவர் கேள்வி எழுப்பினார். முகைதின் யாசினின் மருமகனுடன் ஒர வழக்கறிஞரான மன்சூர் பின் சாட் என்பவரும் தற்போது போ​லீசாரால் தேடப்பட்டு வருகிறார்.

WATCH OUR LATEST NEWS