சிலாங்கூர் சுல்தானை அவமதித்ததாக ஆடவர் ​மீது விசாரணை

ச​முக வலைத்தளத்தில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா வை அவமதித்ததாக கூறப்படும் ஆடவர் ஒருவரை போ​லீசார் விசாரணை செய்து வருவதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி முஹமாட் சஷுஹைலி முஹமாட் சயின் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தமது முக​நூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓர் இடுகையில் சிலாங்கூர் சுல்தானுக்கு விசுவாசம் இல்லாததைப் போல ஓர் உணர்வை ஏற்படுத்தியதாக அந்த ஆடவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று முஹமாட் சஷுஹைலி குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர் 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்ட​ம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்​லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS