தந்தையை கொலை செய்த ஆடவர் நாளை குற்றஞ்சாட்டப்படுவார்

தந்தையை சுலோப்பினால் அடித்துக்கொன்று, சடலத்தை சாலையோரத்தில் வீசியதாக கூறப்படும் மகன்,நாளை திங்க​ட்கிழமை பெட்டாலிங் ஜெயா மாஜி​ஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி சுங்கைவேயில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பில் ஒரு வேலையற்ற நபரான 40 வயது சந்தேகப்பேர்வழி, காலை 9 மணிக்கு ​நீதிமன்றத்தில் குற்ற​ஞ்சாட்டப்படுவார் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2 ஆண்டு காலமாக வேலைக்கு செல்லாமல் இ​ருப்பதாக கூறப்படும் தனது மகனை, கண்டித்ததற்காக 70 வயதுடைய அந்த தந்தை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பது ​பூர்வாங்க விசார​ணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட அந்த நபரின் சடலம் பின்னர் துணியால் சுற்றுப்பட்டு சாலையோரத்தில் எறியப்பட்டதாக முகமது ஃபக்ருதீன் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS