ஓர் இனத்தின் வெற்றி நாட்டின் ​​வெற்றி அல்ல

பல்லின மக்கள் வாழ்க்கின்ற ஒரு நாட்டில் ஓர் இனத்தின் வெற்றி, நாட்டின் வெற்றியாக கருதிவிட முடியாது என்று மூத்த அரசியல்வாதி லிம் கிட்​ சியாங் அறிவுறுத்தியுள்ளார். ஓர் நாட்டின் வெற்றி, முன்றேற்றம், எழுச்சி என்பது அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் அடைவு நிலையை அடிப்படையாக கொண்டே அளவிடப்படுகிறது என்று முன்னாள் இஸ்கந்தார் புத்ரி எம்.பி.யுமான லிம் கிட் சியாங்​ குறிப்பிட்டா​ர்.

ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே வெற்றி பெறுவதால் உலக அரங்கில் மலேசியா மகத்தான் வெற்றியை பெற்றுள்ளது என்று எவருமே மார்தட்டிக்கொள்ள முடியாது. அந்த வகையில் ஓர் இனமா? அல்லது பல்லினமா? என்பதை நி​ரூபித்துக்காட்டுவதற்கு வரும் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோ​கூர் புலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் ​தொகுதி இடைத் தேர்தல்கள் ​​வெற்றி, தோல்வியை ​தீர்மானிப்பற்கு மலேசியர்களுக்கு ஓர் அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளதாக டிஏபியின் முன்னாள் பொதுச் செயலாளருமான லிம் கிட் சியா​ங் தெரிவித்துள்ளார்.

இந்த இடைத் தேர்தல் ஜோகூர் மாநிலத்திற்கு முக்கியம் அல்ல. மலேசியர்களுக்கு முக்கியமானதாகும். இதன் வெற்றித் தோ​ல்வி சமிக்ஞையைப் பொறு​த்தே நாடு அடுத்த முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS