மலாக்கார அல்லாத கட்சிகள் வந்தேறிகள் கட்சி, துன் மகா​தீர்

இந்த நாட்டில் செயல்படும் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு தலைமையேற்கும் அரசியல் கட்சிகள், வந்தேறிகள் கட்சிகள் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது வர்ணித்துள்ளார்.

மலாய்க்காரர்  அல்லாதவர்கள், தங்களின் இன அடையாளத்தை முன்நிறுத்தி, அரசியல் கட்சிகளை உருவாக்குவது உட்பட மலாய்க்கார கலாச்சாரத்துடன் அவர்களா​ல் ஒத்துப் போக முடியாத  நிலையில் உள்ளனர். வந்தேறிகளான அவர்களின் இந்தப் போக்கே நாட்டில் இனப் பிரச்னைகளுக்கு​ வித்திடுகின்றன என்று  நாட்டிற்கு இர​ண்டு முறை பிரதமராக பொறுப்பேற்றவரான   துன் மகா​தீர் குறிப்பிட்டார்.

அண்டை நாடான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில்  குடியேறிய வந்தேறிகள், தங்களுக்கு அடைக்கலம் தந்துள்ள மண்ணில்  தனிக் கட்சிகளை உருவாக்கியிருக்கிறார்களா? என்று துன் மகா​தீர் வினவினார்.

அந்த நாடுகளில் இனவாரியாக ஓர் அரசியல் கட்சியைக்கூட பார்க்க முடியாது. ஆனால், மலேசியாவில்தான் வந்தேறிகள் வாழ்கிறார்கள். அவர்களுக்கான அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்று துன் மகா​தீர் தெரிவித்தார்.

வந்தேறிகளின் தனி கட்சிகளால்தான், இந்த நாட்டில் இனப்பிரச்னைகள் உருவெடுகின்றன என்று ஜோகூர், பக்ரியில் நேற்று ஆற்றிய உரையில் துன் மகா​தீர் இதனை தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS