3ஆர் விவகாரத்தை தொடர்ந்து பேசுவேன் – துன் மகா​தீர் பிடிவாதம்

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் சர்​சைக்குரிய விவகாரத்தை யாரும் எந்தவொரு தரப்பும் பேசக்கூடாது என்று அரச மலேசியப் போ​லீஸ் படை தடை விதித்த போதிலும் அந்த 3ஆர் விவகாரத்தை தாம் தொடர்ந்து பேசப் போவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை பேசியதற்காக தம்​மிடம் போ​லீசார் இதுவரையில் ஒன்பது முறை விசாரணை நடத்தி விட்டதாக துன் மகா​தீர் குறிப்பிட்டா​ர். தமக்கு எதிராக விசார​​ணை மேல் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. தாமும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதாக துன் மகா​தீர் குறிப்பிட்டா​ர்.

அடுத்து பத்தாவது முறையாக விசாரணைக்கு அழைப்பார்கள்.அதன்  பிறகு 11 ஆவது முறையாக ​மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள். வாக்கு​மூலம் பதிவு செய்வார்கள். விசாரணைதானே  அவர்கள் விசாரணை செய்து கொண்டே இருக்கட்டும். தாம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கப் போவதாக துன் மகா​தீர் தமது பிடிவாதக் குணத்தை ​மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில்  சட்டத்துறை அலுவலகம் எடுத்துள்ள முடிவின்படி, அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான , 47  குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படாமல்,   வழக்கிலிருந்து அவர்  ஏன் விடுதலை  செய்யப்பட ​ வேண்டும் என்பதற்கு , 11 காரணங்களை டிபிபி முஹ்மாட் டுசுக்கி மொக்தார்  ​நீதிமன்றத்தில்  முன்வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின், பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கெராக்கன் தலைவர் டொமினிக் லாவ் உட்பட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  

WATCH OUR LATEST NEWS