ஒற்றுமை அரசாங்கத்திற்கு தாம் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்ட பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர் என தம்மை பிரகடன்ப்படுத்திக் கொண்ட மூவார் எம்.பி சையது சாதிக் அப்துல் ரஹ்மான், நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக ஆற்றிய உரை எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெகுவாக கவர்ந்தது.
இளம் எம்.பி -யான சையத் சாதிக்-கின் கன்னிப் பேச்சு, அவரை நாடாளுமன்ற நாயகனாக உயர்த்திப் பிடித்துள்ளது என்று அராவ் எம்.பி ஷாஹிதான் காசிம் வர்ணித்துள்ளார்.
துணைப்பிரதமர் அகமாட் ஜாஹிட் ஹமிடி விவகாரம் தொடர்பில் அவசர தீர்மானம் ஒன்று கொண்டுவருவதற்கு முன்மொழியப்பட்ட பரிந்துரையை சபா நாயகர் நிராகரித்ததைத் தொடர்ந்து சையத் சாதிக் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தினார்.