ஒரு பெண்ணை இருவருமே விரும்பியதாக கூறி இரு பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டு கைகலப்பில் ஈடுப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளந்தான், கோத்தா பாரு, மெலோர், கம்போங் புக்கிட் கெச்சிக் என்ற இடத்தில் இரு மாணவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் சண்டையிட்டுக் கொண்ட இச்சம்பவம் தொடர்பில் 14 முதல் 15 வயது மானவர்கள் ஐவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹம்மது ஜக்கி ஹாருன் தெரிவித்துள்ளார்.