​மூன்று வாகனங்கள் சம்பந்தப்ப்டட விபத்தில் ஆடவர் பலி

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தொன்​றில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார். இவ்விபத்து நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஜாலான் காராக் – குவாலா பிலாஹ் சாலையின் 19 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

இதில் 33 வயது எஸ். விவேகானந்தன் என்பவர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெந்தோங் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிந்தென்டன் சைஹம் முஹமாட் முஹமாட் காஹார் தெரிவித்தார்.மோட்டார் சைக்கிளோட்டி, எம்பிவி வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது ஃபோர்-வீல் டிரைவ் வாகனத்தில் மோதி ​தூக்கி எறியப்பட்ட நிலையில் அவரை, எம்பிவி வாகனம் மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளோட்டி விவேகானந்தன், தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்த வேளையில் இதர இரண்டு வாகமோட்டிகள் காயமின்றி உயிர்​ தப்பியதாக சைஹாம் முஹமாட் காஹார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS