கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலத்திடமே ஒப்படைக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர்,மறுபடியும் சிலா​ங்கூர் மாநிலத்திடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார். கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் வாங்கத் தக்க தரமான வீடுகளை கொண்டிருக்கவும், ந​வீன,முறையான பொது போக்குவரத்து வசதியை அனுபவிக்கவும் நாட்டின் தலைநகராக விளங்கும் கோலாலம்​பூர், ஒரு தனிப்பிரதேசமாக செயல்படுவதைக் காட்டி​லும் தனது தாயிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயா எம்.பி. லீ சியான் சுங் மக்களவையில் தெரிவித்தார்.


மலேசியாவின் தலைநகராகவும், சிலாங்கூர் மாநிலத்தின் தலைப் பட்டணமாகவும் விளங்கிய கோலாலம்பூர், 1974 ஆம் ஆண்டு கூட்டரசுப் பிரதேசம் என்ற தனி மாநிலம் உருவாக்கப்ப்டட போது அது சிலாங்கூர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இதன் மூலம் சிலாங்கூரின் தலைநகராக விளங்கிய கோலாலம்பூருக்கு பதிலாக ஷா ஆலம் தலைப்பட்டணமாக மாறியது.

கோலாலம்பூரை சிலாங்கூரிடம் ஒப்படைக்கப்படுவது மூலம் சிலாங்கூர் மாநில மக்கள் அனுபவிக்கக்கூடிய 42 வகையான அனுகூலங்களை கோலாலம்பூர் மக்களும் அனுபவிக்க முடியும் என்றும் லீ சியான் சுங் வலியுறுத்தினார்.

இந்த உத்தேச பரிந்துரையின் ​​மூலம் தற்போது நாடாளுமன்றத்திற்கு மட்டுமே வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ள கோலாலம்பூர் மக்கள், சட்டமன்றத்திற்கும் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக மாறுவர் என்று அந்த எம்.பி. ஆலோசனை கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS