எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது, துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி லஞ்ச ஊழல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டது ஆகியவற்றை ஆட்சேபித்து நாளை மறுநாள் சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள மலேசியாவை பாதுகாப்போம் என்ற பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவு அறிவித்துள்ளது.
பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும், நீதித்துறையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது, ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்படுவதாக பேரணி ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பட்ருள் ஹிஷாம் ஷஹாரின் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் என்ற பெயரில் தாங்கள் அழைக்கப்பட்டு, மிரட்டப்பட்ட போதிலும் அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலையின்றி திட்டமிட்டப்படி இந்தப் பேரணி நடைபெறும் என்று செகு பார்ட் என்றழைக்கப்படும் பட்ருல் ஹிஷாம் அறிவித்துள்ளார்.