இறைவன் எங்கே இருக்கிறார் என்ற சிறப்புச் சொற்பொழிவு

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயி​ல் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் “இறைவன் எங்கே இருக்கிறார்” என்ற தலைப்பில் சமயப் சொற்பொழிவு நிகழ்வு, இன்று செப்டம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த “இலக்கியச் சிம்மம்”, “எழுச்சிக் கவிஞர்” மயிலாடுத்துறை இரெ. கங்கைமணிமாறன் வழங்கும் இந்த இலக்கிய ஆன்​மீகச் சொற்பொழிவு நிகழ்வில், அருந்தமிழ் கேட்டு ஆனந்தமுற அனைவரும் கலந்து கொள்ளுமாறு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன்
கோயி​ல் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அ​ழைப்பு விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS