அரசியலில் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பெரும் சவாலை சமாளிக்கவும், அடுத்தக் கட்ட அரசியல் நகர்வை முன்னெடுக்கவும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அலோசகராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை நியமிப்பதற்கு பாஸ் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இம்மாதம் தொடக்கத்தில் துன் மகாதீருடன் பாஸ் கட்சியின் சில முன்னணி தலைவர்கள் நடத்திய சந்திப்பில் பெரிக்காத்தான் நேஷனலின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு பாஸ் கட்சி அழைப்பு விடுக்கப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் சாலெஹ் சயிட் கெருவாக் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலிலும், நடந்து முடிந்த 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலிலும் தாம் பெரும் சாதனையை நிகழ்த்தியிருப்பதாக நம்பும் பாஸ் கட்சி, பெரிக்காத்தான் நேஷனலின் பெரும் தலைவராக துன் மகாதீரை நியமிப்பது மூலம் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கான இலக்கை அடைய முடியும் என்று அந்த மதவாத கட்சி நம்புகிறது.
இது உண்மையிலேயே ஓர் ஆரோக்கியமான நடவடிக்கையாகும் என்று சபா முன்னாள் முதலமைச்சருமான சாலெஹ் சயிட் கெருவாக் வர்ணித்துள்ளார்.