மலேசியாவை காப்பாற்றுவோம் என்ற சுலோகத்தை தாங்கி, பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவினரால் கோலாலம்பூர் மாநகரில் நாளை செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை, மலேசிய தினத்தையொட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆட்சேப பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் துறை இன்று அறிவித்துள்ளது.
பொது அமைதி சட்டத்தின் கீழ் இந்த ஆட்சேப பேரணிக்கு அனுமதி கேட்டு, பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவு செய்து கொண்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி ஷுஹைலி சையின் தெரிவித்துள்ளார்.
பொது அமைதி சட்டத்தின் கீழ் போலீஸ் துறை வினவியுள்ள பல கேள்விகளுக்கு உரிய பதிலை அவர்களால் அளிக்க முடியவில்லை. கோரப்படும் நிபந்தனைகளை அவர்களால் பூர்த்தி செய்ய இயலவில்லை. இந்நிலையில் கோலாலம்பூர் மாநகரின் நில அடையாளத்தை தாங்கிய, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் சோகோ பேரங்காடி முன் நடத்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவு திட்டமிட்டு இருந்த ள அமைதி பேரணிக்கு அனுமதியில்லை என்று ஷுஹைலி சையின் தெளிவுபடுத்தியுள்ளார்.