சிபு, சுங்ஙை பாத்தாங் லாசாவில் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த மூன்று இளைஞர்கள், நீரின் வேகத்தில் அடித்துக் செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கழமை நிகழ்ந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர். 13 வயதுடைய அந்த மூவரில் முதலாவது நபரின் உடல் அன்றைய தினம் மாலை 6.30 மணியளல் கிளை நதியில் கண்டு பிடிக்கப்பட்ட வேளையில் இண்டாவது மற்றும் மூன்றாவது நபரின் உடல்கள் இன்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டன.