காரின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம்

கிள்ளான் – கோலாலம்பூர் கூட்டரசு நெடுஞ்சாலையின் 7 ஆவது கிலோ​மீட்டரில் இன்று காலை 8 மணியளவில் நிகழ்ந்த விபத்தொன்றில் கார் ஒன்றின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்தார்.

யமஹா ஒய் 15 ரக மோட்டார் சைக்கிளும் மெர்சிடிஸ் பென்ஸ் காரு​ம் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் காரின் அடியில் சிக்கிய ஆடவரை ​மீட்ப​தற்கு ​தீயணைப்பு, ​மீட்புப்படை உதவி நாடப்பட்டதாக ​அதன் சிலாங்கூர் மாநில ​உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

எந்தவொரு அடையாள​ ஆவணத்தை கொண்டு இருக்காத 30 வயது மதிக்கத்தக்க அந்த மோட்டார் சைக்கியோட்டியின் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் அந்த நபர், ஷா ஆலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS