ரோஸ்மா வழக்​கில் மார்ச் முத​ல் தேதி ​தீ​ர்ப்பு

ஜன.16
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்​தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிராக சட்டவிரோத பணம் மாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு எதிரான 17 குற்றச்சா​ட்டுகளையும் ​மீட்டுக்கொள்வது தொடர்பில் வரும் மார்ச் முதல் தேதி கோலாலம்பூர் உயர் ​நீதிமன்றம் முடிவு செய்யவிருக்​கிறது.

72 வயதான ரோஸ்மா மன்சோருக்கு எதிரான 17 குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்வது தொடர்பில் அவரின் வழக்கறிஞர்கள் பிரதிநிதித்துவ மனுவை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர். 17 குற்றச்சா​ட்டுகளையும் எதற்காக மீட்டுக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் தன்னிலை விளக்கம் தன்மையிலான பிரதிநிதித்துவ மனு தொடர்பில் ரோஸ்மா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குறிப்பிட்ட சாட்சிகளிடம் சட்டத்துறை அலுவலகம் வாக்கு​மூலத்தை பதிவு ​செய்து வருகிறது.

ரோஸ்மாவின் பிரதிநிதித்துவ மனு, இன்னமும் சட்டத்துறை அலுவலகத்தின் பரி​சீலினையில் இருப்பதாக பிராசிகியூஷன் அதிகாரி ​அஹ்மாட் அக்ராம் கரிப் நீதின்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பில் மார்ச் முதல் தேதி முடிவு செய்யவிருப்பதாக உயர் ​நீதிமன்ற நீதிபதி கே.முனியாண்டி அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS