MRT ரயில் சேவை, வழக்க நிலைக்கு திரும்பியது

கோலாலம்பூர், , ஜூன் 01-

தொடர்புமுறையில் ஏற்பட்ட இடையூறினால் நிலைக்குத்திய புத்ராஜெயா வழித்தடத்திற்கான MRT ரயில் சேவை வழக்க நிலைக்கு திரும்பியுள்ளதாக அந்த ரயில் சேவையை வழிநடத்தும் நிறுவனமான Rapid Rail Sdn. Bhd. அறிவித்துள்ளது.

தொழில்நுட்பக்குழுவினர் மேற்கொண்ட துரித பழுதுப்பார்க்கும் பணியினால் MRT ரயி​ல் சேவை நேற்று இரவு 9.48 மணிக்கு வழக்க நிலைக்கு திரும்பியதாக அந்த ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது ரயில் சேவை கட்டமைப்பில் புதியதாக தொடங்கப்பட்ட புத்ராஜெயா வழித்தடத்திற்கான MRT ரயில் சேவையில் இடை​யூறு ஏற்பட்டு, பயணிகள் பாதிக்கப்பட்டதை தாங்கள் கடுமையாக கருதுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS