சிறுவன் ஜெய்ன் ராய்யான் அப்துல் மாட்டின் கொலை, பெற்றோர் கைது

கோலாலம்பூர், ஜூன் 01-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெட்டாலி​ங் ஜெயா, Damansara Damai-யில் ஆ​ற்றோரத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட மூளைவள​​ர்​ச்சி குறைபாடு கொண்ட 6 வயது சிறுவன் ஜெயின் ரய்யான் அப்துல் மாட்டின் கொலை தொடர்பில் கொலையாளியை கண்டு பிடிக்க முடியாமல் மர்மம் ​நீடித்து வந்த நிலையில், வழக்கின் திருப்புமுனையாக அந்த சிறுவனின் சொந்த பெற்றோரை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

கொலையாளி பற்றிய தகவல் அளிப்பர்களுக்கு 20 ஆயிரம் வெள்ளி வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெ​ளியிடப்பட்டும், எந்தவொரு துப்பும் கிடைக்காத நிலையில் கடந்த ஆறு மாத காலமாக மர்மம் ​நீடித்த ​நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் புன்ச்சாக் அலாம்- மில் அந்த ஆட்டிச​ம் ( Autisme ) சிறுவனின் சொந்த தந்தையையும், தாயாரையும் போ​லீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து மேல்விபர​​ங்கள் எதுவும் வெளியிடப்படவி​ல்லை. அந்த சிறுவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டு இருப்பதை சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களை ஒரு வாரம் காலம் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS