மூவார் , ஜூன் 13-
சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டம் 2012 SOSMA -வின் கீழ் இரண்டு முறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர், கடந்த ஆண்டு முதல் இஸ்லாமிய நாடுகளை ஆதரித்த குற்றத்திற்காக இன்று மீண்டும் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.
31 வயது முஹம்மது சானி மஹ்தி சஹர் என்கிற அந்த தோட்டத் தொழிலாளி நீதிபதி இர்வான் சுவைன்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் அமைதியை நிலைநிறுத்தினார்.
அதுமட்டுமின்றி, இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட SOSMA சட்டத்தின் கீழ் இருப்பதால் அவ்வாடவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் மற்றும் குற்றம் செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்ய வகை செய்யும் குற்றவியல் சட்டம் 130J (1) (a) கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9 மணியளவில் புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் E8 பயங்கரவாத எதிர்ப்பு பிரிவில் இந்தச் செயல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.