ஜொகூர் பாரு, ஜூன் 25-
ஜொகூர், பத்து பஹாட், காம்ப்ளெக்ஸ் பெங்குளு, முக்கிம் லீனாவ் அருகே டுரியான் தோட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூடு காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட இளைஞருடையது என்பது அவரின் குடும்பத்தினர் மூலம் உறுதி செய்யப்பட்டது.
அந்த எலும்புக்கூடு, கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் காணாமல் போன பௌஸான் அப்துல் ஹாலிட் என்ற 16 வயதுடைய இளைஞருடையதாகும். .
அந்த எலும்புக்கூடுடன் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அவரின் ஆவணங்கள் மற்றும் பொருள்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக பத்து பஹாட் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹாருல் அனுவார் அப்துல்லாஹ் சானு கூறினார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியேறிய பண்டார் புத்ரா இண்டாவைச் சேர்ந்த அந்த ஐந்தாம் படிவ மாணவர் பின்னர் வீடு திரும்பவில்லை என அவர் சொன்னார்.