அலோர் செட்டார், ஜூன் 25-
2025 ஆம் ஆண்டு கெடாவிற்கு வருகை தரும் ஆண்டாகும். சுற்றுப்பயணிகளின் வருகை ஊக்கவிக்கும் கெடாவிற்கு வருகை தரும் ஆண்டு, மத்தியக் கிழக்கு நாடுகளை குறிப்பாக அரபு சுற்றுப்பயணிகளை இலக்காக கொண்டு நடத்தப்படுவதாக கெடா மந்திரி பெசார் முஹமட் சனுசி முஹமட் நோர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த சுற்றுப்பயணிகள் வாங்கும் சக்தியைக் கொண்டவர்கள் ஆவர். அவர்களின் வருகை கெடா மாநிலத்திற்கு வருமானப் பெருக்கத்திற்கு வழி வகுக்கும் என்று முகமட் சனூசி குறிப்பிட்டார்.