பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29-
ஓர் இஸ்லாமியர் கட்சியான பாஸ், மலேசியாவில் எந்த காலத்திலும் தனியொரு கட்சியாக ஆட்சிக்கு வர முடியாது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டுமானால் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மற்றும் பாரம்பரிய ஆதரவாளர்கள் அல்லாத மலாய்க்காரர்களுடன் இணைந்து பணியாற்றி, கூட்டு ஒத்துழைப்பு கொண்டால் மட்டுமே அதானல் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
பாஸ் கட்சி, தனியொரு பெரும் கட்சியாக மலேசியாவில் ஆட்சியை அமைக்கும் அளவிற்கு அது மக்களிடம் அபரிமிதமான செல்வாக்கை கொண்டிருக்கவில்லை. அதன் நிலையும், தோற்றமும், செல்வாக்கும், கிளந்தான், திரெங்கானு மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களின் எல்லைகளுடன்தான் வரையறுக்கப்பட்டு இருக்கும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.