மனநல சோதனைக்கு உட்படுத்த உத்தரவு

ஜெம்போல், ஜூலை 1-

தனது தாயாரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய ஆடவர் ஒருவரை மனநல சோதனைக்கு உட்படுத்துமாறு நெகிரி செம்பிலான், Jempol மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜுன் 22 ஆம் தேதி, ஜெம்போல், பண்டார் செரி ஜெம்போல், ஃபெல்டா ராஜா 1 வில் உள்ள தனது வீட்டில் தாயாராருடன் நடந்த வாக்குவாதத்தில் 20 வயதுடைய அந்த இளைஞர் இந்த அராஜக செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் நோர்ஷாஸ்வான் இஷக் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த இளைஞர், குற்றவியல் சட்டம் 342 பிரிவின் கீழ் மன நல மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS