டிரெய்லர் லாரி குடைசாய்ந்தது இருவர் பலி

பாப்பர், ஜுலை 02-

சங்கிலி சக்கர கனரக இயந்திரத்தை எற்றிச் சென்ற டிரெய்லர் லரி, சாலையை விட்டு விலகி தடம் புரண்டதில் அதன் ஓட்டுநரும், உதவியாளரும் மாண்டனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் சபா, பாப்பர், ஜாலான் கிமானிஸ்-கெனிங்காவ் சாலையில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பாக மாலை 5.11 மணியளவில் ஓர் அவசர அழைப்பை தாங்கள் பெற்றதாக கிமானிஸ் தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் முகமது ஜோஹைனின் ருஸ்லான் தெரிவித்தார்.

இயந்திரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அவ்விரு ஊழியர்களும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS