சிறார்கள் மனநலப்பாதிப்பு அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜூலை 02-

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து சிறார்கள் சம்பந்தப்பட்ட மனநல பிரச்சனை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோ செரி DR . ZULKEFLY அகமது தெரிவத்துள்ளர்.

தேசிய சுகாதார ஆய்வறிக்கையின்படி கடந்த ஆண்டு, 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 10 லட்சம் சிறார்கள் மனநல பிரச்சனை எதிர்நோக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டர்.

5 க்கும் 15க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறார்களில் மனநலப் பிரச்சனை எதிர்நோக்கி இருப்பவர்களில் கடந்த 2019 , ஆம் ஆண்டு 7.9 விழுக்காடு அல்லது 24 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை , கடந்த ஆண்டு 16.6 விழுக்காடு அல்லது 9 லட்சத்து 22 ஆயிரமாக 318 பேராக உயர்ந்துள்ளாது.

இது இரண்டு மடங்கு அதிகரிப்பாகும் என்று நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தஞ்சோங் கராங் எம்.பி. DR சுல்காபெரி ஹனாபி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் DR DZULKEFLY மேற்கண்டவாறு கூரினார்.

WATCH OUR LATEST NEWS