மே 31 வரை இணையத்திலிருந்து 94 அரிசி விற்பனை விளம்பரங்கள் நீக்கம்

புத்ராஜெயா, ஜூலை 03-

கடந்தாண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை அரிசி விற்பனை தொடர்பான 94 விளம்பரங்கள் இணையத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய தரப்பினர் நெல் – அரிசி – கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள சில்லறை வணிகர் LICENSE-சை கொண்டிருக்கவில்லை என வேளாண் உணவு உத்ரவாத அமைச்சு தெரிவித்தது.

அத்துடன் விற்பனை செய்யப்பட்ட அரிசி உறுதிப்படுத்தப்படாத தரப்பிடம் இருந்து பெறப்பட்டது அமைச்சு மேற்கொண்ட சோதனை வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.

மின் வர்த்தக தளம் மூலம் வாடிக்கையாளர்களிடம் விற்கப்பட்ட அந்த அரிசி யாவும் முறையான அனுமதியின்றி நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

சட்டத்தை மீறும் அத்தகைய செயலுக்கு எதிராக 25 ஆயிரம் ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படும் அல்லது ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என, அமைச்சு எச்சரித்தது.

WATCH OUR LATEST NEWS