கோலாலம்பூர், ஜூலை 03-
நாட்டிலுள்ள வல்லுனர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் சிக்கலுக்கு விரைந்து தீர்வுக்காணப்படும்.
புதிய ஊதியமுறையை மேம்படுத்தியது அந்தத் தீர்வுகளில் ஒன்று என பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா சுட்டிக்காட்டினார்.
அப்புதிய ஊதிய முறையானது, அயல்நாடுகளில் வழங்கப்படுவதற்கு ஒப்ப, அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதை உறுதிச் செய்யும்.
நாட்டிலுள்ள அறிஞர்களும், நிபுணர்களும் வெளிநாடுகளுக்கு இடமாறுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
அதுபோன்ற மாற்றங்கள் நிபுணத்துவம் வாய்ந்த ஆள்பலத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
அதே சமயம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஊறு விளைவிக்கும்.
அந்தப் பிரச்சனையை சமாளிக்க ஆக்ககர ஊதியமுறைகள் மேம்படுத்தப்படுவது அவசியம்.
மக்களவையில் கடந்தாண்டு 11 இலட்சத்து 80 ஆயிரம் (1.18 juta) வல்லுனர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தது தொடர்பில், கூலிம் பண்டார் பாரு உறுப்பினர் ரோஸ்லன் ஹாசிம்-மின் கூடுதல் வினாவுக்கு, டாக்டர் சாலிஹா விடையளித்தார்.